தமிழ்நாடு

குணா கதாபாத்திரம் போல கற்பனையிலேயே வாழ்கிறார் கமலஹாசன்: ஜெயக்குமார்

DIN


சென்னை: குணா படத்தில் வரும் கதாபாத்திரம் போலவே, தற்போதும் நடிகர் கமலஹாசன் கற்பனையிலேயே வாழ்ந்து வருகிறார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசு மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கமலஹாசன் முன் வைத்து வருகிறார். தொடர்ந்து இப்படி அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் கமல் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மட்டோம். நாங்கள் இப்போதும் உப்புப் போட்டுத்தான் சாப்பிட்டு வருகிறோம்.

கட்சித் தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமலஹாசன் தான். குணா கதாபாத்திரம் போன்று தற்போதும் கமலஹாசன் கற்பனையிலேயே வலம் வருகிறார். யாருடைய கைப்பாவையாக கமலஹாசன் செயல்படுகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஜெயலலிதா இருக்கும் போது தமிழகத்தை விட்டு ஓடுவேன் என்று கூறியவர் கமலஹாசன் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

மீனவர்கள் மீதான தாக்குதலில் ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வரும், துணை முதல்வரும் எடுத்த நடவடிக்கை என்ன என்று என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இருவரும் பிரதமரை சந்தித்து மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மீது திவாகரனும், தினகரனும் குற்றச்சாட்டுகளைக் கூறியிருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, சந்தர்ப்பவாதங்களின் ஒட்டுமொத்த உருவங்கள் இவர்கள். தமிழகத்தையே சூறையாடி வளைத்துப்போட்டு வைத்துள்ளார்கள். 

உப்பிட்டவர்களேயே உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போன்ற வழக்குகளைத்தான் கடந்த சில நாட்களாக அவர்களிடம் நாம் பார்த்து வருகிறோம். ஜெயலலிதாவை விமரிசிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயலலிதாவை குற்றவாளி என தினகரன் கூறியிருப்பது எவ்வளவு நெஞ்சழுத்தம் என்பதையே காட்டுகிறது. அவர்களை வரலாறு மன்னிக்காது என்று ஆவேசமாகக் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT