தமிழ்நாடு

நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது! 

DIN

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் நீதிபதி கிருபாகரன். தனது தீர்ப்புகள் மூலமும், வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கும் கருத்துக்களுக்காகவும் புகழ்பெற்றவர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ-ஜியோ அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கானது நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.அது அப்பொழுதே பெரும் விமர்சனதுக்குள்ளானது.

அதே நேரம் வேறு ஓர் வழக்கு விசாரணையில் சமூக வலைத்தளங்களில் நீதிமன்ற தீர்ப்பு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் விமர்சிக்கப்படுவது தொடர்பாகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியினைச் சேர்ந்தவர் மஹாலக்ஷ்மி. இவர் ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் சில விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்ற மாண்பினை அவமதிப்பு என்ற காரணத்தின் காரணமாக அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT