தமிழ்நாடு

போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான்: தினகரனின் 'தில்' பேட்டி! 

DIN

பெங்களூரு: ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை காண்பதற்காக டிடிவி தினகரன் அங்கு சென்றுள்ளார். அவர் அப்பொழுது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி எங்களுக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் மட்டும்தான். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட வெற்றிச் சின்னமான இரட்டை இலையை ஜெயலலிதா வளர்த்தெடுத்தார். ஆனால் தற்பொழுது அந்த சின்னமானது துரோகிகளின் கைகளில் உள்ளது. எனவே எங்களுக்குத்தான் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகள் விழும். இரட்டை இலையை வென்றெடுக்கவே நாங்கள் தற்பொழுது அதனை எதிர்த்து நிற்கிறோம். 

இது ஒரு மக்கள் விரோத ஆட்சி.மக்களாலேயே வெறுக்கப்படும் ஒரு ஆட்சியாகத்தான் இது உள்ளது. உண்மையில் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இடைத்தேர்தல் முடிவில் தெரிய வரும். எங்கள் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் உள்ள காரணத்தால், ஏதோ ஆதாயத்தினை எதிர்பார்த்துதான் அணி மாறியுளார்கள்.அவர்களை பற்றிக் கவலையில்லை.

வேட்பாளர் தொடர்பான விபரங்கள் பற்றி ஆலோசனை செய்யவும்,கட்சி நிர்வாகிகள் மனவோட்டத்தினை சசிகலாவுக்கு தெரியப்படுத்தவும் தற்பொழுது இங்கு வந்துள்ளேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT