தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூசகம்! 

DIN

சென்னை: விரைவில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறில்லை என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:

பாஜகவுடன் கூட்டணி வைக்கின்ற நோக்கம் தலைவர்களுக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் அது ஒன்றும் தவறு இல்லையே?   அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட்டவர்கள்தானே?

நாங்கள் மட்டும் இல்லை; திமுக கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது. அத்துடன் மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

யாருடன் கூட்டணி என்பது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய தலைவர்கள் இணைந்து முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT