பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வைத்து பாஜக நாடகமாடுகிறது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கூர்க் விடுதியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அவகாசம் அளிக்காததால் சபாநாயகரை சந்திக்கப் போவதில்லை. ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை தற்போது போய்விட்டது.
பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வைத்து பாஜக நாடகமாடுகிறது. பாஜகவின் நாடகத்துக்கு ஆளுநர் உறுதுணையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.