தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணையை தொடங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசு உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து நீதிவிசாரணையைத் தொடங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 
திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முருகானந்தம். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து நீதி விசாரணை நடத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த ஆக. 17 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின் நீதி விசாரணை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து மேடைகளில் பேசுவதால் நீதி விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிக்கப்படும். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேச இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிய ஏற்கெனவே தமிழக அரசு உத்தரவிட்டபடி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை உடனடியாக நியமித்து நீதி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT