எங்கள் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் உங்களிடம் தரப்பட்டுள்ளன: ரஜினி ட்வீட்டுக்கு ஸ்டெர்லைட் பதில்
எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன என்று நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் ஆலை பதிலளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.
Advertisement