திருச்சி: திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்த விதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதனன்று திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்காக அவர் செவ்வாய் காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்த விதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.