தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் 78-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் திங்கள்கிழமை அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், 'உங்களின் (ஆளுநர்) பிறந்த தினமான மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்தையும், அமைதியையும் அளித்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நன்றி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் வாழ்த்து: 'தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிம்மதியையும் தந்து, தமிழக மக்களுக்குச் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்' என தனது வாழ்த்துச் செய்தியில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து: 'எல்லா வளமும், நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்' என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆளுநருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.