தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

DIN


கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலைகள் அணிவித்து சொர்ணாபிஷேகம் நடந்தது. பகல் 1.30 மணிக்கு சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT