தமிழ்நாடு

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சியளிக்கும் இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 2016 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 

ENS

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளை சிறப்பிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டவை நடத்தப்படும். இதில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிலும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இங்கு அலங்காநல்லூர் உள்ளிட்ட காளை வகைகள் களமிறக்கப்படும். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தற்போது முதலே இதற்காக தயார்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மதுரை வைகை அணைப் பகுதியில் தங்கள் வீட்டுக் காளையை இளைஞர்கள் தீவிரமாக பயிற்சி அளித்து தயார்படுத்தி வருகின்றனர். 

முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 2016 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதி நாளில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் நடைபெற்றது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT