சென்னை: கஜா புயலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்புக்கு அரசு மட்டும் நிவாரணம் வழங்கிட முடியாது என ரஜினிகாந்த் கூறினார்.
"பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
கஜா புயலால் உயிரிழந்து, வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய தருணம் இது. உதவி அளித்தவர்களுக்கு நன்றி. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு, மிகப்பெரிய பேரழிவை அரசாங்கத்தால் மட்டும் அதனை சரி செய்துவிட முடியாது. நாம் எல்லோரும் கரம்கோர்ப்போம். புயல் பாதிப்பு சீரமைப்புபணிக்கு அனைவரும் உதவுவோம். பணம் இருப்பவர்கள் உதவ வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து பேசினார்.