தமிழ்நாடு

அறநிலையத் துறை ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம்

DIN


தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளராக கே.பணீரந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள நிலையில், முழு கூடுதல் பொறுப்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவு விவரம்:
இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளராக இருந்த டி.கே.ராமச்சந்திரன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணையாளர்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் பொறுப்பு, கூடுதலாக கே.பணீந்திர ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குராக உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT