முகப்பு
தமிழ்நாடு

பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவி மீது தீ வைப்பு

மதுரை திருமங்கலம் அருகே பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2018 at 5:52 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM

மதுரை மாநகரில் அமைந்துள்ள திருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டை என்ற கிராமத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடித்து தனது தாயாருடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டுக்கு வரும் வழியில் அந்த மாணவி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் 40 சதவீத தீக்காயங்களுடன் அந்த மாணவிக்கு திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய அந்த நபரின் பெயர் பாலமுருகன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.