கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அணி மாறியது குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
டிடிவி தினகரனுடன் முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு இன்று சந்தித்துப் பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முதல்வரின் ஆதரவாளரான பிரபு, எதிரணி தலைவரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் நலத்திட்டங்களை வழங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரபு அணி மாறியது குறித்த தகவல்கள் தனக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் பிரபுவின் கருத்தை அறிந்த பின்புதான் பதிலளிக்க முடியும் என்றும் கூறினார்.