தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கான பணிகள் அண்மையில் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியானவருக்கு அரசு செலவில் நினைவிடம் கூடாது என்றும் எனவே, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT