தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கான பணிகள் அண்மையில் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியானவருக்கு அரசு செலவில் நினைவிடம் கூடாது என்றும் எனவே, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

மறக்க முடியாத தருணங்கள்! டி20 உலகக் கோப்பை சுவாரசிய நிகழ்வுகள்...

திருவள்ளூர்: தேவாலயத்திற்குள் ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் ருசிகரம்! போலீஸ் ரோந்து வாகனத்தில் வந்து பைக்கை திருடியவர்!

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

SCROLL FOR NEXT