தமிழ்நாடு

சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் சாவு

தினமணி

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவில் ஆட்டுப் பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் இறந்தன.
 ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு கிராமம், பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (80). விவசாயி. இவர், 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகிலுள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் இரவு நேரத்தில் ஆடுகளை அடைத்து விடுவார்.
 வெள்ளிக்கிழமை (ஜூலை 20) இரவு, வழக்கம்போல பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, அருகிலுள்ள வீட்டில் படுக்கச் சென்று விட்டார். சனிக்கிழமை காலை 6 மணியளவில் ஆட்டுப் பட்டிக்கு வந்தபோது, அங்கு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்துக் குதறிக் கொன்றிருந்தது. மேலும் 5 ஆடுகளும் கடிபட்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்தன. ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.
 இதை அறிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். கால்நடை மருத்துவர் விரைந்து வந்து, கடிபட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு, ரூ. ஒரு லட்சம் இருக்கும் என்றும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT