குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. அவை கூடியதும் முன்னாள் எம்எல்ஏக்கள் தனகேரன், ஜான்ஜேக்கப், ராஜாங்கம், கந்தசாமி, ஆண்டிவேல் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து குரங்கணி தீ விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.