தமிழ்நாடு

தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


சென்னை: தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT