சென்னை: தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.