தூத்துக்குடி: நிவாரண முகாம்கள், மீட்புகுழுக்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு வரும் 14 ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில், பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, சிறப்புப் படை தயார் நிலையில் உள்ளது.
நிவாரண முகாம்கள், மீட்புகுழுக்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம் என்றார் அமைச்சர் உதயகுமார்.