முகப்பு
தமிழ்நாடு

டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோர் எத்தனை பேர்? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:


மதுரை: தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பரவி வரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 20ம் தேதிக்குள் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →