தமிழ்நாடு

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் உடனடி நடவடிக்கை: வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்   

DIN

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளில் தாமதம் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.   

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:

கஜா புயல் பாதிப்புக்களான மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என கணிக்க இயலவில்லை. நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவும் பகலுமாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மீட்புப் பணிகளுக்கு பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும். 

நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளில் ஏதாவது தாமதம் என்றால் உடனே தகவல் அளியுங்கள். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT