மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நெல் ஜெயராமனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழகம் முழுவதும் 15 ஆண்டுகளாகப் பயணம் செய்து 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அவரை மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தறிந்தார்.
விரைவில் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார். மேலும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் அவரிடம் ஸ்டாலின் வழங்கினார்.