தமிழ்நாடு

நெல் ஜெயராமனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

DIN

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நெல் ஜெயராமனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழகம் முழுவதும் 15 ஆண்டுகளாகப் பயணம் செய்து 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். 
தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அவரை மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தறிந்தார். 
விரைவில் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார். மேலும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் அவரிடம் ஸ்டாலின் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT