தமிழ்நாடு

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை

DIN


குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததை அடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி செம்மண் நிறத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு போலீஸார் தடைவிதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் குளித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT