தமிழ்நாடு

டிசம்பருக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக கல்வி அமைச்சர்

DIN


வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவின் 8-ஆவது நாளான வியாழக்கிழமை (அக். 18) பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மேலும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே சூரிய, மின்சக்தி மற்றும் ஆளில்லா விமானங்கள் குறித்த அறிவை வளர்க்கும் வகையில் உலகத் தரத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT