முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.18 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.18 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:26 AM
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் 105.18 அடியாக உயர்ந்துள்ளது.
பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை 104.92 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 105.18 அடியாக உயர்ந்துள்ளது.
மழையின் காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 17,994 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 13,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 71.71 டி.எம்.சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.