தமிழ்நாடு

செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய 50 ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம்

செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் 50 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN


சென்னை: செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் 50 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் பேசியபடி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதால், கவனம் சிதறி சாலை விபத்து நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன் வந்தனர்.

அதன்படி, புகார்கள் மீது விசாரணை நடத்தி 50 ஓட்டுநர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மீண்டும் இதே தவறை செய்தால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT