இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் 9-ஆவது ஆண்டுக்கான விருதுக்கு வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியின் அறக்கொடைக் குழு உறுப்பினர்கள் மற்றும் டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் அலுவலரான மல்லிகா ஸ்ரீனிவாசன் உள்ளடக்கிய குழுவால் இந்திரா சிவசைலம் விருதுக்கு ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
2018-ஆம் ஆண்டுக்கான இந்த விருது வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருது வரும் அக்டோபர் 12-ஆம் தேதி மியூசிக் அகாதெமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அறக்கட்டளைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.