தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை: மின்துறை அமைச்சர் பி.தங்கமணி

DIN


தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என மாநில மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தின் மின் தேவை சுமார் 14,500 மெகாவாட். இந்த மின் தேவை அனல் மற்றும் புனல், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், மத்திய மின் தொகுப்பு ஒதுக்கீடு, நீண்ட, நடுத்தர மற்றும் குறுகியகால மின் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
மத்திய தொகுப்பில் இருந்து 6,153 மெகாவாட்டிற்கு பதில் 3,335 மெகாவாட் மட்டுமே தற்போது கிடைக்கிறது. காற்றாலையில் இருந்து வர வேண்டிய 3000 மெகாவாட் மின்சாரமும் சரியாக வரவில்லை. இதனால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணி எனக் கூறி கடந்த 3 மாதங்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கடந்த 3 மாதமாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட தமிழகத்துக்குத் தரப்படவில்லை.
மின்சார பற்றாக்குறை இருப்பினும், வெளி சந்தை, நீர் மற்றும் அனல் மின் உற்பத்தி மூலம் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த இடையூறு என்பது எதிர்பாராத தற்காலிக மின்தடையே.
அதேவேளையில் பராமரிப்புப் பணி என்பது எப்பொழுதும் வழக்கத்தில் உள்ள ஒரு நிகழ்வுதான். அதைக் காரணமாக வைத்து மின்வெட்டு ஏதும் செய்யப்படவில்லை.
அனல்மின் நிலையங்களில் உடனடியாக கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. ஆனாலும் தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இல்லை. எந்த காலத்திலும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது. மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம். மின்சாரத்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது என்றார் அமைச்சர் பி.தங்கமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT