தமிழ்நாடு

பெட்ரோல் நிரப்பிய போது பைக்கில் தீப்பிடித்த சம்பவம்: காயமடைந்த இளைஞர் பலி

DIN


நெல்லை: பாளையங்கோட்டையில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஆல்வின் என்ற 19 வயது இளைஞர், கடந்த 13ம் தேதி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது டேங்கை நிரப்புமாறு கூறியதால், டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது. அப்போது சில சொட்டு பெட்ரோல் ஆல்வின் உடையிலும் பட்டுள்ளது. இதனை அவர் கவனிக்கவில்லை. பணத்தை செலுத்திவிட்டு சற்று தள்ளிச் சென்று வண்டியை ஸ்டார்ட் செய்த போது எதிர்பாராத விதமாக பைக் மற்றும் ஆல்வின் மீது தீப்பற்றியது.

உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். ஆல்வின் நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு 60 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஆல்வின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நேரிடுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் ஆல்வின் புதிய பைக்கை வாங்கியுள்ளார். அதற்கு பெட்ரோல் நிரப்பும் போது, டேங்க்கை நிரப்பச் சொன்னதால், பெட்ரோல் நிரம்பி வழிந்து இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. புதிய பைக் வாங்கி ஒரு சில நாட்களிலேயே அவர் தீ விபத்தில் மரணம் அடைந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT