தமிழ்நாடு

ஊழலில் தேசிய விருது பெற முதல்வர் பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது - ஸ்டாலின்

DIN

ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால் முதல் விருதைப் பெற முதல்வர் பழனிசாமிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருப்பதாவது, 

"நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் - ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!

அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு, அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்!" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT