தமிழ்நாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க, தனியாக நிர்வாகி ஒருவரை நிர்வகிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக மாநில அதிமுக நிர்வாகியான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதியன்றி விசாரணைக்கு வந்த போது,  ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.

இந்த வழக்கானது புதனன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT