முகப்பு
தமிழ்நாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2019 at 7:32 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:03 PM

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க, தனியாக நிர்வாகி ஒருவரை நிர்வகிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக மாநில அதிமுக நிர்வாகியான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதியன்றி விசாரணைக்கு வந்த போது,  ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.

Advertisement

இந்த வழக்கானது புதனன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.