தமிழ்நாடு

தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்! 

ராமநாதபுரத்தில் உள்ள மேலசிறுபோத்து கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ANI

ராமநாதபுரத்தில் உள்ள மேலச்சிறுபோது கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாத காரணத்தால் மேலச்சிறுபோது கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணியை திங்கள்கிழமை நடத்தினர்.

அப்போது தங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து கோஷமிட்டனர். அதில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பள்ளி என எதுவும் தங்கள் கிராமத்தில் முறையாக இல்லை என்று தங்களின் உரிமைகளை கோரி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க்கடன் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தனர். 

இதையடுத்து வருகிற 2019 மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டுமொத்த கிராமும் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT