தமிழ்நாடு

அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதை துரோகிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: தினகரன்

DIN

அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் எங்கும் அமமுகவுக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையிலெடுத்து அதன் மூலம் அமமுகவில் இருக்கிற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள்.

அப்படித்தான் ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தியின் பிரசார வாகனத்தை அடித்து உடைத்திருக்கிறார்கள்.

தேன்கனிக்கோட்டை சாலையில் வைத்து, இரு சக்கர வாகனத்தில் கையில் நீண்ட கத்திகளோடு வந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக வேட்பாளர் அப்போது வாகனத்தில் இல்லாததால், உயிர் தப்பி இருக்கிறார்.

தோல்வி பயத்தால் இப்படி வன்முறையைக் கையிலெடுப்பவர்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் உள்ள அமமுக உடன்பிறப்புகள் வன்முறையாளர்களிடம் கவனமாக இருந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT