தமிழ்நாடு

நான்கு மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு தொகுதிகள் மாற்றம்

DIN

நான்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சி தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரவக்குறிச்சி தொகுதியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களும், சூலூர் தொகுதியில் கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களும் பணியாற்றுவர். 
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் அவர்கள் இணைந்து பணிபுரிவர் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு அரவக்குறிச்சி தொகுதியும், அரியலூர் மாவட்டத்துக்கு ஓட்டப்பிடாரமும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு சூலூர் தொகுதியும், கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு திருப்பரங்குன்றம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT