தமிழ்நாடு

செளந்தரபாண்டியனாரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்

DIN


பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட செளந்தரபாண்டியனாரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த செளந்தரபாண்டியனார் தமது சமுதாயப் பணிகளால் அந்த கிராமத்துக்கு சுயமரியாதை மண் என்று பெயர் வாங்கிக் கொடுத்தவர். 
1921-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையில் தமது 27-ஆவது வயதிலேயே உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமது வாழ்நாளில் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் பாடுபட்டவர். ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது, பெண் கல்விக்கு அதிலும் மருத்துவம் படிப்பதற்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்தார். பேருந்து பயணச்சீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பேருந்தில் ஏற்ற மறுக்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அச்சிட்டு சமூக நீதியை நிலைநாட்டியவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விதவைத் திருமணத்துக்கு ஆதரவாக பல்வேறு  புரட்சிகளைச் செய்தவர். காப்பி விவசாயிகளுக்கான விற்பனை மையங்களை ஏற்படுத்தியவர்.
சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட செளந்தரபாண்டியனார், பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். 1927-ஆம் ஆண்டு இவரது தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில்தான் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே சமூக நீதி, சுயமரியாதை, உழவர்கள் நலன், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட செளந்தரபாண்டியனாரின் சிறப்புகளையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். 
அதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதி செளந்தரபாண்டியனார் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT