அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுத்துறை தரப்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 26ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.