தமிழ்நாடு

சென்னை, அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

சென்னை பல்கலை., அண்ணா பல்கலை. மற்றும் அண்ணாமலை பல்கலை.யில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT