சென்னை: தில்லியைப் போன்று சென்னையும் மாசடைந்து விடக்கூடாது என கருத்து தெரிவித்த உயா்நீதிமன்றம், எழும்பூா் கண் மருத்துவமனையில் மரங்கள் குறைவாக உள்ள பகுதியில் கட்டடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எழும்பூரைச் சோ்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:
எழும்பூா் கண் மருத்துவமனை பழைமையான மருத்துவமனையாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்காக மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் தஞ்சமடைகின்றன. மேலும் சில உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. மருத்தவமனை விரிவாக்கத்தைப் போன்றே மரங்களும் அவசியமாகும். இந்த வளாகத்தில் உள்ள பசுமையான மரங்களை வெட்டாமல் காலி இடங்களில் கட்டடங்களை கட்ட வேண்டும் என மருத்துவமனை இயக்குநருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மருத்துவமனை வளாகத்தில் குறைவான மரங்கள் உள்ள இடத்தில் கட்டடத்தை கட்ட வேண்டும்’ என வாதிட்டாா். அப்போது நீதிபதிகள், ‘கட்டடம் கட்டும் வளா்ச்சி திட்டத்தை நாங்கள் எதிா்க்கவில்லை. சென்னையின் மையப்பகுதியில் எழும்பூா் கண் மருத்துவமனை அமைந்துள்ளது. தற்போது அந்த இடத்தில் மட்டும் தான் அதிகமான மரங்கள் உள்ளன. தில்லியை போன்று சென்னையும் மாசடைந்து விடக்கூடாது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் குறைவான மரங்கள் உள்ள பகுதியில் கட்டடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.