தமிழ்நாடு

இது திருப்பூர் சம்பவம்: முதியவர் மீது கார் மோதி விபத்து; காரை ஓட்டியது ஒரு சிறுமி!

DIN

திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் முதியவா் காயமடைந்தாா்.

திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் நவம்பா் 28 ஆம் தேதி வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா். 

அப்போது அந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து காந்திமணியன் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

விபத்தில் காயமடைந்த காந்திரமணியனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். காந்திமணியனின் சிகிச்சைக்கான செலவை சிறுமியின் குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்ததால் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யவில்லை.

இந்த விபத்து தொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT