மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,993 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,993 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.