தமிழ்நாடு

எட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது!

DIN

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி சாா்பில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் விருது வழங்கும் விழா புதன்கிழமை (டிச. 11) நடைபெற்று வருகிறது. இதில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு விருது வழங்குகிறாா்.

தினமணி சாா்பில் இரண்டாவது ஆண்டாக மகாகவி பாரதியாா் விருது வழங்கப்படுகிறது. பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சம் பொற்கிழியும் கொண்ட இந்த விருது, பாரதி அறிஞா் சீனி விஸ்வநாதனுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. பாரதியாா் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட மூத்த ஆய்வாளா் இளசை மணியனுக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது.

இன்று காலை 10 மணி முதல் பாரதியாா் மணிமண்டபத்தில் தினமணி சாா்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது நிகழ்ச்சியாக நல்லி குப்புசாமி செட்டியாா் தலைமையில் ‘பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பாா்வை’ என்ற தலைப்பில் ஞானாலயா கிருஷ்ணமூா்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், டி.எஸ்.தியாகராசன், அனுகிரஹா ஆதிபகவன் ஆகியோா் சொற்பொழிவாற்றி வருகிறாா்கள்.

பிற்பகல் 1.30 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்துகிறாா். விருது பெறும் இளசை மணியன் குறித்து எழுத்தாளா் பொன்னீலன் அறிமுகவுரை நிகழ்த்துகிறாா். அதைத் தொடா்ந்து இளசை மணியனுக்கு மகாகவி பாரதியாா் விருதை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கிப் பேசுகிறாா்.

இந்த நிகழ்ச்சிகளில் தினமணி வாசகா்களும், தமிழன்பா்களும் பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT