அண்ணா நினைவுதினத்தையொட்டி சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடக்கும் பொதுவிருந்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
ஆண்டுதோறும் அண்ணா நினைவு நாளன்று முக்கிய திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகின்றது.
அதன்படி இவ்வாண்டு தமிழகம் முழுவதும் 313 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட இருக்கிறது. இதில் சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடக்கும் பொதுவிருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
சென்னையை பொறுத்தவரை 32 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.