தமிழ்நாடு

அண்ணா நினைவு தினம்: சென்னையில் நடக்கும் பொதுவிருந்தில் பங்கேற்கிறார் முதல்வர்

DIN

அண்ணா நினைவுதினத்தையொட்டி சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடக்கும் பொதுவிருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். 

ஆண்டுதோறும் அண்ணா நினைவு நாளன்று முக்கிய திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகின்றது. 

அதன்படி இவ்வாண்டு தமிழகம் முழுவதும் 313 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட இருக்கிறது. இதில் சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடக்கும் பொதுவிருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். 

சென்னையை பொறுத்தவரை 32 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT