தமிழ்நாடு

குடும்ப அட்டை திருத்தம்: நாளை குறைதீர் முகாம்

DIN


குடும்ப அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் சனிக்கிழமை (ஜன. 19) சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களை மேற்கொள்ளலாம். 
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அதனைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT