தமிழ்நாடு

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு: முன்னாள் மாவட்ட ஆட்சியரிடம் குறுக்கு விசாரணை

DIN


சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சாலிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. 
கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால், ஏராளமான குளறுபடிகளைச் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
எனவே அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியரான பங்கஜ்குமார் பன்சால் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT