தமிழ்நாடு

நெசவாளர்களுக்கான அகவிலைப்படி10 சதவீதம் உயர்வு

DIN


நெசவாளர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 
சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:
நெசவாளர்களின் வருவாயை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அவர்கள் இப்போது பெற்று வரும் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்த்தி அளிக்கப்படும். இதனால், ஆயிரத்து 137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டுக்கு ரூ.14 கோடி அளவுக்கு பயன் பெறுவர்.
கூலி உயர்வு: விலையில்லாத வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்த்தப்படும். அதன்படி, சேலைக்கு ரூ.39.27-இலிருந்து ரூ.43.01-ஆகவும், வேட்டிக்கு ரூ.21.60-இலிருந்து ரூ.24-ஆகவும் உயர்த்தி அளிக்கப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி சேலைக்கு ரூ.85.67-இலிருந்து, ரூ.90.29-ஆகவும், வேட்டிக்கு ரூ.65.75-இலிருந்து ரூ.69.58-ஆகவும் உயர்த்தப்படும்.
விலையில்லாத சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டருக்கு ரூ.11.32-இலிருந்து ரூ.12.16-ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் சுமார் ரூ.11.23 கோடி அளவுக்கு பயன்பெறுவர்.
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கியின் மறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை கடனாக பெற்று வருகின்றன. இத்தகைய கடனுக்கு இப்போது தமிழக அரசு 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கி வருகிறது. இந்த வட்டிச் சுமையைக் குறைக்கும் வகையில் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு ஏற்படும் செலவினம் ரூ.14.40 கோடியில் இருந்து ரூ.21.60 கோடியாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT