தமிழ்நாடு

வீடுகளிலேயே இறப்போர்: சான்றிதழ்கள் வழங்குவதை எளிமையாக்க கோரிக்கை

DIN

மருத்துவமனைகளில் அல்லாமல் வீடுகளிலேயே இறப்போரின் மறைவுக்கான சான்றிதழ்கள் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டுமென அதிமுக எம்.எல்.ஏ., பரமசிவம் கோரிக்கை விடுத்தார்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை பேசிய அவர், மருத்துவமனையில் இறந்தால் அதற்குரிய காரணத்தைத் தெரிவித்து படிவம் 4ஏ சான்று அளிக்கப்படும். இதன் அடிப்படையில் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஆனால், வீடுகளில் இறப்போருக்கும் அத்தகைய படிவம் 4ஏ-வை கிராம நிர்வாக அலுவலர்கள் கோருகிறார்கள். 

மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்படும் அத்தகைய சான்றை வீடுகளிலேயே இறப்போருக்கு அளிக்க முடிவதில்லை. எனவே, வீடுகளில் இறந்தால் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு இறப்புச் சான்றிதழை கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT