தமிழ்நாடு

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவையாம்: ஒப்புக் கொண்டது டிஎன்பிஎஸ்சி

DIN


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டது டிஎன்பிஎஸ்சி.

மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வை சுமார் 68 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் இல்லாத பதில் கூறவே முடியாத கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன?

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதை ஏற்க முடியாது என்று கூறியிருக்கும் நீதிபதி பார்த்திபன், தவறான கேள்விகள் என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தவறான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT