தமிழ்நாடு

திமுகவிடம் அதிக இடங்கள் பெற வேண்டும்

DIN


உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடமிருந்து இருந்து அதிக இடங்களைப் பெற வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியது: கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க முன் வந்தது. 
அதனால், திமுகவிடமிருந்து இருந்து அதிக இடங்களைப் பெற வேண்டும் அல்லது, தனித்துப் போட்டியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும். 
200 வார்டுகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடியாவிட்டாலும் தென்சென்னை பகுதியில் உள்ள 35 வார்டுகளில் தனித்துப் போட்டியிட வேண்டும். போட்டியிடும் வார்டுகளில் காங்கிரஸை வெற்றிபெற வைப்பேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT