தமிழ்நாடு

காலமானார் பர்வத ரெஜினா பாப்பா

DIN


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், மகளிரியல் துறைத் தலைவருமான பர்வத ரெஜினா பாப்பா (76) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) காலமானார்.
இவர் பெண்கள் முன்னேற்றத்திற்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கும் வித்திட்டவர். தேமுதிக மாநில மகளிரணி முன்னாள் செயலாளராக இருந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இவருக்கு கணவர் பொன்சுந்தர், 2 மகன்கள், 1 மகள் உண்டு. இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 9444082525.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT